Surah Al-Qaria - Tamil Translation by Abdulhameed Baqavi
ٱلۡقَارِعَةُ
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்
Surah Al-Qaria, Verse 1
مَا ٱلۡقَارِعَةُ
(அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன
Surah Al-Qaria, Verse 2
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ
(நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா
Surah Al-Qaria, Verse 3
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ
அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்
Surah Al-Qaria, Verse 4
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ
கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்
Surah Al-Qaria, Verse 5
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ
Surah Al-Qaria, Verse 6
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்
Surah Al-Qaria, Verse 7
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ
Surah Al-Qaria, Verse 8
فَأُمُّهُۥ هَاوِيَةٞ
அவன் தங்குமிடம் ஹாவியாதான்
Surah Al-Qaria, Verse 9
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ
அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா
Surah Al-Qaria, Verse 10
نَارٌ حَامِيَةُۢ
(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்
Surah Al-Qaria, Verse 11