Surah Abasa - Tamil Translation by Jan Turst Foundation
عَبَسَ وَتَوَلَّىٰٓ
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்
Surah Abasa, Verse 1
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது
Surah Abasa, Verse 2
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா
Surah Abasa, Verse 3
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்
Surah Abasa, Verse 4
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ
Surah Abasa, Verse 5
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்
Surah Abasa, Verse 6
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை
Surah Abasa, Verse 7
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ
Surah Abasa, Verse 8
وَهُوَ يَخۡشَىٰ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக
Surah Abasa, Verse 9
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்
Surah Abasa, Verse 10
كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்
Surah Abasa, Verse 11
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்
Surah Abasa, Verse 12
فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது
Surah Abasa, Verse 13
مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது
Surah Abasa, Verse 14
بِأَيۡدِي سَفَرَةٖ
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்
Surah Abasa, Verse 15
كِرَامِۭ بَرَرَةٖ
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்
Surah Abasa, Verse 16
قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்
Surah Abasa, Verse 17
مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா)
Surah Abasa, Verse 18
مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்
Surah Abasa, Verse 19
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்
Surah Abasa, Verse 20
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்
Surah Abasa, Verse 21
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்
Surah Abasa, Verse 22
كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை
Surah Abasa, Verse 23
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்
Surah Abasa, Verse 24
أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்
Surah Abasa, Verse 25
ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து
Surah Abasa, Verse 26
فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்
Surah Abasa, Verse 27
وَعِنَبٗا وَقَضۡبٗا
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்
Surah Abasa, Verse 28
وَزَيۡتُونٗا وَنَخۡلٗا
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும்
Surah Abasa, Verse 29
وَحَدَآئِقَ غُلۡبٗا
அடர்ந்த தோட்டங்களையும்
Surah Abasa, Verse 30
وَفَٰكِهَةٗ وَأَبّٗا
பழங்களையும், தீவனங்களையும்
Surah Abasa, Verse 31
مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக
Surah Abasa, Verse 32
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது)
Surah Abasa, Verse 33
يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும்
Surah Abasa, Verse 34
وَأُمِّهِۦ وَأَبِيهِ
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்
Surah Abasa, Verse 35
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்
Surah Abasa, Verse 36
لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்
Surah Abasa, Verse 37
وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்
Surah Abasa, Verse 38
ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்
Surah Abasa, Verse 39
وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்
Surah Abasa, Verse 40
تَرۡهَقُهَا قَتَرَةٌ
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்
Surah Abasa, Verse 41
أُوْلَـٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்
Surah Abasa, Verse 42